கருவரை அரியாசனம் தொடங்கி , கல்லறையில் கரையும் வரை அரசியலின் சுவடுகள் .இரு உயிர் ஓருயிராய் மாறுகையில் பாலின சர்ச்சை , ஒரு பாலருக்கோ பாலியல் பிரச்சனை .கோடி மக்களின் வாழ்வியல் திருத்தங்கள் ஏற்பட தலைவனாய் மாறுகிறோம் , நமக்குள் வரும் மனத்தாங்கலை மட்டும் ஊரிடம் சென்று மன்றாடுகிறோம் .மேடை முகமூடியில் முகநகை உதிர்பவனை ரோஷத்துடன் அரசியல் குற்றவாளி என்று அழைக்கின்றோம் , நாளும் முகநக மட்டும் நண்பனாய் இருபவனிடம் வெட்கமின்றி ஏமாளியாய் கூழ் குடிகின்றோம் .தனக்கென வருபவள் தோழியாய் , அவனுக்கென வந்தால் அவள் ஆவாள் காதலியாய் ! நாம் எழுதுகையில் மட்டும் கிசுகிசுக்கள் அடுத்தவரின் Biography அந்தஸ்து பெறும் . சர்வதிகாரம் இன்றி குடிகள் அனைவரும் சமமாய் இயற்ற வேண்டிய அழகிய அரசியல் காவியத்தின் இன்றைய நிலை 'குழாயடி சண்டையில் ' ! எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடு , என் கையாலகாததனம் , மற்றவரை பற்றி பெருமையாய் புறம் பேசுதல் , அடுத்தவர்களுக்கு மட்டும் வரும் குறைகள் என நம் குறைபாடுகளுக்கு நாம் கூறிக்கொள்ளும் எழுத படாத விதி 'அரசியல்' ! தன குடும்ப வழக்குக்கு அரசியல் என பெயரிட்டு ,இங்கு இல்வாழ்கை காணும் (இந்த ) அரசியல்வாதிகள் கூறுவது போல் (இவர்கள்) அரசியல் ஒரு சாக்கடை தான் !
KAVITHAIGAL
Thursday, September 11, 2014
Tuesday, May 20, 2014
தீவிரவாதம்
பல நேரம் குறிஞ்சி மலரும்
முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
நமக்குள் தீவிரவாதமாய் !!
முள்செடியில் மறைவதுண்டு !
பாதையில் இருக்கும் புதரை வெட்டாமல்
வேறு பாதை எடுத்து செல்கிறோம் ,
வளரும் போது அது நம்மை காயப்படுத்தினால்
திரும்பி பார்க்கிறோம் !
வெளி வர துடிக்கும் குறிஞ்சி மலரின்
குரல் மறுக்கப்படுவதினால் ,
முட்களின் மிரட்டல்
நமக்குள் தீவிரவாதமாய் !!
கலியாண தேனிலா
பூப்படைந்த மகளின்
கோலத்திலிருந்து நான்
கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
புதுக்கோலம் ,
நீர்கோலமாய் போய்விடுமோ
என் மனகோலம் !
இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
என்ற பயம் எனக்கு !
அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !
மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?
என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
கணவனாய் கல்போல் நிற்பானோ ?
7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?
இன்று தெரிகிறது ,
ஏன்,
என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !
கோலத்திலிருந்து நான்
கலைவதற்கு முன்பே ,
நாளை காலை மணமகளாய்
புதுக்கோலம் ,
நீர்கோலமாய் போய்விடுமோ
என் மனகோலம் !
இரவு பந்தியில் உப்பு கம்மி என்ற
கவலை என் வீட்டாருக்கு ,
இனி வரும் அந்தியும் எப்படி போகும்
என்ற பயம் எனக்கு !
அவன் (நாளை முதல் தானே அவர் ),
அவன் , நிறம் பற்றி தெரியவில்லை ,
குணம் பற்றியோ யாரும் சொல்லவில்லை !
மணமகளாய் அனுப்ப என் வீட்டார் துணிந்துவிட்டனர் ,
மகளாய் ஏற்றுக்கொள்ள அவன் வீட்டார் விரும்பிவிட்டனரோ ?
என் பாதையில் துணைவனாய் துணை வருவானா ,
கணவனாய் கல்போல் நிற்பானோ ?
7-மணிக்கு முன் இங்கு சூரியன் எழும்பியதில்லை ,
இனி 5-மணிக்கு அவனை எழுப்புவதில் எனக்கு கஷ்டமில்லை ,
என் பயமோ,
அங்கு சூரியன் கண்களை மூட இடம் தருவரோ ?
இன்று தெரிகிறது ,
ஏன்,
என் அன்னையும் என்னை மகனாய் கேட்டாள் என்று !
அம்மாவின் வியர்வை துளிகள்
முதல் முறை என் மேல் விழுந்த துளியை ,
என்னை பூமிக்கு அனுப்பியதில்
ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,
நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,
சுரத்தில் தூங்கும் போது உரசியது
இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,
இளம் வயதில்,
ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
என் மேல் காய்ந்தது ,
உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !
இறுதியில் ,
என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
சுரதினில் மழலை உறங்கையில்
வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,
உணர்ந்தேன் ,
என் ஏமாற்றத்தை ,
என் விழுந்த அத்தனையும் ,
என் அம்மாவின் வியர்வை துளி என !!
என்னை பூமிக்கு அனுப்பியதில்
ஆண்டவன் விட்ட ஆனந்த கண்ணீர் என நினைத்தேன் ,
நடுநிசியில் விழித்து எழுந்து அழுது முடித்து ,
விடியற்காலையில் கண்ணுறங்கும் போது நனைத்தது ,
என்னை குளிர்விக்க வானம் தந்த பனித்துளி என குதித்தேன் ,
சுரத்தில் தூங்கும் போது உரசியது
இன்னும் நிற்காத மழையென நடுங்கினேன் ,
இளம் வயதில்,
ஊர் பெயர் தெரியாத பலரை உலகமென நினைத்து ,
கட்டாத கட்டிடம் உடைந்தது என நிற்கும் போதும் ,
என் மேல் காய்ந்தது ,
உப்பு சப்பற்ற என் கண்ணீர் என ஏமாந்தேன் !
இறுதியில் ,
என் குழந்தையை கொஞ்சுகயிலும் ,
குழந்தை உறங்கும் வரை உறங்காமல் இருந்த களைபினிலும் ,
சுரதினில் மழலை உறங்கையில்
வருணனை திட்டி கொண்டு அனுதினமும் அவனுடன் அமர்கையிலும் ,
இளம் வயதில் உப்பு சற்ற கண்ணீர் அவனை வதைகயிலும் ,
உணர்ந்தேன் ,
என் ஏமாற்றத்தை ,
என் விழுந்த அத்தனையும் ,
என் அம்மாவின் வியர்வை துளி என !!
இளமை ஒரு சாக்கடை !
பருவம் தொடங்கும் முன் பரவசம் ,
தெளிந்த பிறகே வாழ்கை நம் வசம் !
கடையை பார்க்கையில் 50 பைசா ஆசை மிட்டாய் வாங்கியது
அன்றைய ஆசை மனது மனது !
மதுவும் , மாதுவும் இன்றி வேறேதும் தேடாது
இன்று வாழும் போதை மனது !
சப்பு சாமான்களுடன் கனவு இல்லத்தில் வாழ்ந்தது
அன்றைய கபடமற்ற மனது !
Whatsapp -லும், Facebbok -லும் விரல் விந்தையென விரக்தியை அழைத்தது
இன்றைய காளை மனது !
நிலா என்பது பாட்டி கதைக்கு காத்திருந்தது
அன்றைய கிள்ளை மனது,
இரவையே தொலைத்தது வாழும் கிளர்ச்சி மனது !
காதல் என்பதும் அம்மாவின் பாசம் என்றது
அன்றைய பிள்ளை மனது ,
நட்பு கூட மோகத்தின் வாயில் அகப்பட்டது
வாழும் நம் இளமை வயதில் !
குப்பை மேல் குப்பை சேர்ப்பதில் அர்த்தமில்லை ,
இதன் காரணமே இளமை அரசியல் நாம் காணவில்லை !!
Saturday, January 5, 2013
வாழ்க சுதந்திர பாரதம் !!!!!
வெடித்து விழும் உடல் துண்டுகளில் ,
விலை வாசி ஏற்றத்தினால் ,
தங்கம் மட்டுமே கண்ணுக்கு தெரிய ,
ஒரே குண்டில் பக்கத்து தெருவே
அடியோடு புகையாக ,
பற்றி எறிவது நம் Scooter இல்லை
Govt Bus தான் என்று பலர் பெருமூச்சு விட ,
"கப்பலேறி போயாச்சு ,
சுத்தமான நாடாச்சு ",
- எங்கேயோ S.P.B .இன் குரல் கேட்க ,
எனக்கோ ,
என் சாம்பாருக்கு தேவை கொத்தமல்லி !
அவன் அவனுக்கு
அவனவன் கஷ்டம் !!!
வாழ்க சுதந்திர பாரதம் !!!!!
Monday, November 28, 2011
நனையாத ஈரங்கள் !!!
கருவின் உரு கைகளில் தவழுகையில் ,
காகித கப்பல் கரை சேர்கையில் ,
பட படக்கும் பட்டாம்பூச்சி உள்ளங்கையினுள் துடி துடிக்கையில் ,
எதிர்பாராத விடுமுறைகளில் ,
மொட்டை மாடி நிலவில் அன்னை மடி தொழுகையில் ,
பிடிக்காத விவாதமும் பிடித்தவர்களிடம் விவாதிக்கையில் ,
எதிர்பார்க்கும் தருணமும் எதிர்பாராமல் நிகழ்கையில் ,
மழையில் நனைந்து கண்ணீர் கலந்து நடக்கையிலும்
துடைத்து விடும் கைகளுடனும் ,
உவமையில்லா உவகையின் கிறுக்கல்கள் !!!!
Subscribe to:
Posts (Atom)